பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்;-
வெளியில் பச்சை நிறத் தோலுடன் காட்சி அளிக்கும்.பூசணிக்கு கல்யாணப் பூசணிக்காய் என்று பெயர். இதில் சதை அதிகம் இருக்கும். தினமும் பூசணிக்காயை சமைத்துச் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் போன்ற நோய்கள் ஏற்படாது
வெண்பூசணிக்காயின் சாற்றைல் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதயம் பலமாகும்.
பூசணிக்காய் விதைகளை நன்கு
காயவைத்து பொடியாகச் செய்து,
வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெரும்.
உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிக்கவும்,ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள்
வெளியேறவும் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த வெண்பூசணி
பயன்படுத்தப்படுகிறது.
தினமும் பூசணிக்காய் உண்பதால் உடல் சூடு தணியும், உடல்வலி, காக்கை வலிப்பு, நரம்புக் கோளாறுகள், பித்தக் கோளாறுகள்
மலச்சிக்கல் மற்றும் சிறுநீரக வியாதிகள் குணமாகும்.
Comments
Post a Comment